சாமிவேலு: என்னைச் சாடாதீர், பணம் கொண்டு வருகிறேன்

samy-velluசிறப்புத் தூதர் போன்ற பதவிகளை அகற்ற வேண்டும் என்ற கூக்குரலுக்கிடையில், இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கான சிறப்புத் தூதர் ச. சாமிவேலு தம்மைச் சாட வேண்டாம் ஏனென்றால் தாம் நாட்டிற்குப் பணம் கொண்டு வருவதாகக் கூறினார்.

கட்டட நிர்மாணிப்புத் தொழிலில் மலேசியா மிகுந்த அனுபவத்தைப் பெற்றுள்ளது என்று கூறிய சாமிவேலு, உலக நாடுகள் அவற்றின் கட்டமைப்புக்கு உதவ நம்மை நாடுகின்றன. அவற்றுக்கு அவை பணம் தருகின்றன என்று இன்று பத்துமலையில் கூறினார்.

“உங்களுக்கு அது வேண்டாமா? நம்மிடம் நூற்றுக்கணக்கான குத்தகையாளர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர்”, என்றாரவர்.

“மந்திரித் தகுதி” உடைய பதவிகளை அகற்ற வேண்டும் என்றும், சாமி வேலுவை பெயர் குறிப்பிட்டு கூறிய பெர்காசா தலைவர் இப்ராகிம் கூற்றுக்கு எதிர்வினையாற்றிய போது சாமிவேலு இவ்வாறு கூறினார்.