பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அதிர்ஷ்டம் அவருக்கு ரிம2.03 பில்லியன் கிடைத்தது; அவரது பெரிய மனசு அதைத் திருப்பிக் கொடுத்து விட்டது என பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி கிண்டலடித்தார்.
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது குற்றச்சாட்டு எதுவும் சுமத்தப்படாது எனச் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி அறிவித்திருப்பது பற்றி ரபிஸி கருத்துரைத்தார்.
பணத்தைக் கொடுத்த சவூதி அரச குடும்பத்தினரிடமே நஜிப் அதைத் திருப்பிக் கொடுத்து விட்டார் என்பதால் அதன்மீதான விசாரணை முடிவுக்கு வருவதாக முகம்மட் அபாண்டி கூறி இருந்தார்.
“இதை நஜிப் முன்பே சொல்லி இருந்தால் பிரச்னை இழுத்துக்கொண்டு சென்றிருக்காதே”, என ரபிஸி கூறினார்.
“ரிம2.6 பில்லியன் கிடைத்த நஜிப் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி. அதேவேளை அவருடைய நல்ல மனசு அதில் ஒரு பகுதியைத் திருப்பிக் கொடுத்து விட்டது. இதெல்லாம் கதைகளில்தான் நடக்கும், உண்மை வாழ்க்கையில் அல்ல”, என்றாரவர்.
ரபிசி அவர்களே! கிண்டலடிக்க வேண்டும் என்றால் அர்த்தத்தோடு அடியுங்கள். இதோ நான் சொல்கிறேன், ஒருவன் நன்கொடை தருகிறான். காராணம், அவன் பெரும் பணக்காரன். நன்கொடை பெறப்பட்டவனுக்கு பல கடமைகள் உண்டு. பொருளாதாரம் சீர்கெட்டுள்ள இவ்வேளையில் நம் பிரதமர் என்ன செய்திருக்க வேண்டும்? அந்த 230 கோடியை BRIM மில் போட்டிருந்தால், ஏழை மக்கள் ஓரளவு பயனடைந்திருக்கலாம் அல்லவா? கொடுத்த பணம் கொடுத்தவனிடமே அதனை திருப்பி அனுப்பலாமா? அந்த பணம் அவனுக்கு தேவைப்படுமா? ஆக, நமது பிரதமர் ஒரு அருமையான பைத்தியக்காரன். தஞ்சோங் ரம்புத்தானில் காலி படுக்கைகள் இருக்கிறதா என கேட்டுச் சொல்கிறேன். keep in touch
அருமை ஐயா சிங்கம் !