ரிம2.6 பில்லியன் நன்கொடை தொடர்பில் தவறு எதுவும் நிகழவில்லை எனச் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி அறிவித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார் முகம்மட் அஸ்மின் அலி(பிகேஆர்- கோம்பாக்).
“அதிர்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்றத்தில்கூட விளக்கம் தரப்படவில்லை. நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் களங்கம் உண்டுபண்ணிக் கொண்டிருந்த விவகாரத்தை மிக விரைவாக முடித்துக் கொண்டிருக்கிறார்கள்”, என அஸ்மின் கூறினார்.
“இதன்மீது நஜிப்பிடமிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் ஒரு தெளிவான விளக்கம் தேவை.
“ஆனால், ஏஜி அலுவலகமோ குற்றம் எதுவும் நடக்கவில்லை, விசாரணை முடிந்தது என அதிர்ச்சிதரும் அறிவிப்பைச் செய்துள்ளது.
“இது ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்டதுதான்”, என பிகேஆர் துணைத் தலைவருமான அஸ்மின் குறிப்பிட்டார்.
இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது? வெங்காயம். நான் தான் அப்போதே சொன்னேனே? இவ்வளவு தில்லு முள்ளு செய்து அதிகாரத்தையும் ஆட்சியையும் குரங்கு பிடியாக பிடிப்பது எதற்கு? இது கூடவா தேறிய வில்லை ? இல்லை தெரியும் ஆனால் தெரியாது?
அதிர்ச்சியா?. ஆணவம் அவுத்துப் போட்டு ஆடுது.
ஆடாதே ஆடாதே மனிதா அடங்கிவிடுவாய் மனிதா என்ற பாடல் ஞாபகத்திற்கு வருகிறது. முழு பூசனிக்காயையும் சோற்றில் (சேற்றில்) மறைத்துவிட்டார்களோ? இறைவனிடம்தான் முறையிடவேண்டும். நம் எல்லோரையும் இறைவனே பாதுகாக்க வேண்டும். எல்லாம் அவருக்கே வெளிச்சம்.
அஸ்மின் அலி அதிர்ச்சி அடைவது ஏற்றுக்கொள்ளமுடியாது. காரணம், முன்பு நீங்களும் அம்னோவில் இருந்தவர்தானே! அங்கு என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியாதா?
ஐயா சிங்கம் ! அஸ்மின் அதிர்ச்சி அடைந்தால்தானே அவர் எதிர் கட்சி தலைவர் என்று தெரியும் ?