ஏஜி-இன் அறிவிப்பால் அஸ்மின் அதிர்ச்சி

shockரிம2.6 பில்லியன்  நன்கொடை  தொடர்பில்  தவறு  எதுவும்  நிகழவில்லை  எனச்  சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அபாண்டி  அலி   அறிவித்திருப்பதைக்  கண்டு  அதிர்ச்சி  அடைந்திருக்கிறார்  முகம்மட்  அஸ்மின்  அலி(பிகேஆர்-  கோம்பாக்).

“அதிர்ச்சி  அளிக்கிறது. நாடாளுமன்றத்தில்கூட  விளக்கம்  தரப்படவில்லை. நாட்டுக்கும்  அரசாங்கத்துக்கும்  களங்கம்   உண்டுபண்ணிக்  கொண்டிருந்த  விவகாரத்தை  மிக  விரைவாக  முடித்துக்  கொண்டிருக்கிறார்கள்”, என  அஸ்மின்  கூறினார்.

“இதன்மீது  நஜிப்பிடமிருந்தும்  அரசாங்கத்திடமிருந்தும் ஒரு  தெளிவான விளக்கம்  தேவை.

“ஆனால்,  ஏஜி அலுவலகமோ  குற்றம்  எதுவும்  நடக்கவில்லை,  விசாரணை  முடிந்தது  என  அதிர்ச்சிதரும்  அறிவிப்பைச்  செய்துள்ளது.

“இது  ஓரளவுக்கு  எதிர்பார்க்கப்பட்டதுதான்”, என  பிகேஆர்  துணைத்  தலைவருமான  அஸ்மின்  குறிப்பிட்டார்.