சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி தாபோங் ஹாஜி இயக்குனர் வாரியத்தில் ஒரு இயக்குனராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
தாபோங் ஹாஜி இணையத்தளம் இதைத் தெரிவித்தது.
ஹஜ்ஜு யாத்திரிகர் வாரியத்தில் பணக்கையிருப்பு குறைந்து வருவதாகக் கூறப்படும் வேளையில் அவர் அவ்வாரியத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முகம்மட் அபாண்டி தாபோங் ஹாஜி இயக்குனர் வாரியத்துக்கு நியமிக்கப்பட்டிருப்பதை அவ்வாரியத்தின் தொடர்பு, பொது உறவுப் பிரிவு பொது மேலாளர் அனிஸ் ஸுஹானி அஹ்மட் மலேசியன் ரிசர்விடம் உறுதிப்படுத்தினார்
அல்தாந்துயா நஜிப்பின் கணக்கில் புகுத்தப்பட்ட 260 கோடி சம்பதமாக விளக்கம் தேவை என ஒட்டுமொத்த நாடே கேள்வி கேட்டிருந்த இவ்வேளையில், ‘அதைப்பற்றி இனிமேல் யாரும் கேள்வி கேட்க வேண்டாம். அந்த பணத்தை அவர் திருப்பி அனுப்பிவிட்டார்’ என சற்று முன்தான் இந்த ஏஜி அப்பாண்டி அறிக்கை விட்டார். இதற்கான இவரது சன்மானம் எவ்வளவு எனக் கேட்டிருந்தேன். பணத்திற்கு பதிலாக இந்த இயக்குனர் பதவி என்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது. sorry, கொஞ்சம் அவசரப்பட்டு தப்பான வியாக்கியானம் கூறிவிட்டேன். பெட்டிக்கு பதிலாக இயக்குனர் பதவியும் ஓகேதான்.
என்ன காரணத்தினால் மலேசியர்கள் பிரிக்கப்பட்டிருக்கினர் இன வாரியாக? எல்லாம் பிரித்தாளும் யுத்திதான். பெரும்பாலான மலாய்க்காரன் அல்தான் துயா நாஜீபுக்குத்தான் ஆதரவு– இந்த நிலையில் எந்த நீதியை எதிர் பார்க்கமுடியும்? அதிகாரம் பதவி ராணுவம் எல்லாம் இவன் கையில் யார் என்ன செய்ய முடியும்?
அப்பாண்டி அலி ! அவர் பொழப்புக்கு வழி கண்டு பிடித்து விட்டார் ! மக்கள் பொழப்பு ?