‘வழக்கு முடிந்துவிட்டது; பிரதமர்மீது சேற்றை வாரி வீசாதீர்’

ali abபிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசியல் எதிரிகள் அவர்மீது தாக்குதல் தொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அம்னோ செராஸ் தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹாப்ஷி கோரிக்கை விடுத்துள்ளார்.

“அவரின் எதிரிகள் அவரைச் சேற்றுக்குள் இழுத்துச் செல்கிறார்கள். விஷத்தைக் கொட்டி அவரது பெயரைக் களங்கப்படுத்துகிறார்கள். அவரின் குடும்பத்தாரையும் விட்டு வைக்கவில்லை.

“இவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும்”, என்று சைட் அலி தம் வலைப்பதிவில் கூறி இருந்தார்.

ஊழல் குற்றச்சாட்டுகள்மீது விசாரணை நடந்து பிரதமர் தவறு எதுவும் செய்யவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“அதை மதிக்க வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.