இறந்த மாயமான பலர் ரகசிய முகாம்களில்!

sl_arme001இலங்கையில் போருக்கு பிந்தைய காலகட்டம் குறித்தும் அதன் உண்மை நிலை குறுத்தும் வரும் கிழமைகளில் அல்லது மாதங்களில் பொதுமக்களிடையே அதிக சர்ச்சைகள் நடக்க வாய்ப்பு உள்ளது.

வெளியாகவிருக்கும் அறிக்கைகள் மற்றும் தகவல்களால் உணர்வுகள் கிளர்ந்தெழலாம் இலங்கை முழுவதுமாக பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் துயரத்தில் விழலாம்.

கடந்த முப்பது ஆண்டுகளாக லட்சக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளான யுத்தத்தினை வரையறுக்கும் கடினமான செயலினை இலங்கை சமீபத்தில் மேற்கொண்டுள்ளது.

இலங்கை அரசினால் துவக்கப்பட்ட இந்த செயலாக்கத்தில் உண்மையை வெளிக்கொணர்தல், பொறுப்புக்கூறுதல், ஆயுத மோதல் தொடர்பாக இழப்பீடு வழங்கி நீதியை நிலைநாட்டுதல் மற்றும் மீண்டும் நடைபெறாமல் தடுத்தல்.

இந்த செயல்பாடுகள் பாதிக்கப்பட்டவர்களின் இழப்பையும் வலியையும் ஒருசேர வெளிக்கொணரும், அதேப்போன்று இரு சமூகத்தினரிடையே வன்முறையால் உருவான கடும் கோபமும் பகையையும்.

விவாதங்களில் கலந்துகொள்ளும் அரசியல்வாதிகள் நீதி வழங்கப்படும் முறை குறித்து விவாதிக்கயில், அல்லது ஆயுத மோதல் குறித்த உண்மை நிலையை எடுத்துரைப்பதும், அவர்கள் கருத்தில் கொள்ளவேண்டியது பொதுமேடையில் வைக்கப்படும் அவர்களின் கருத்துகள் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களை உணர்வு ரீதியாக உடனடியாக சென்று தாக்கும்.

அரசியல் சார்புடையவர்கள் ஊடகப்பிரதிநிதிகள் மிகவும் உணர்வுபூர்வமாக இந்த விவகாரத்தை அணுக வேண்டும்.

உறவினர்கள் மாயமானதாக கருதியுள்ள குடும்பங்களிடம் அவர்கள் அனைவரும் இறந்ததாக கூறுவதும் அவர்கள் ரகசிய முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர் என கூறுவதும் ஒருவகையிலும் பயன் தராது.

யுத்த காலத்தில் நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்த உண்மைத்தன்மையை உறுதியாக வெளிப்படுத்துவது நன்மைபயக்கும். சக போராளி ஒருவரால் அத்துமீறப்படுவதை தனிப்பட்ட ஒருவரது பொறுப்பாக கருத்தில் கொள்ள முடியாது.

சிக்கலானதும் நடந்த உயிரிழப்பிற்கு பொறுப்பேற்பதும், வன்முறை மற்றும் பேரிழப்பிற்கு போதிய விசாரணை மற்றும் புரிந்துகொள்ளுதல் அவசியம்.

உறுதியான ஆதாரங்கள் ஏதுமின்றி பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருது ஊக பிரகடனங்களை வெளியிட வேண்டாம். குறிப்பாக மாயமானவர்களின் குடும்பங்களுக்கு, இதுபோன்ற அறிக்கைகள் அவர்களது நம்பிக்கையை மிக கடுமையாக சிதைக்கும் அல்லது பெரும் எதிர்பார்ப்பு எழும் எவ்வித அடிப்படையும் இன்றி.

ஊடகங்களில் வெளிப்படுத்தும் முன்னர் குறிப்பிட்ட நபருக்கோ, குழுவினருக்கோ, அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ தகவல்களை உறுதிப்படுத்திவிடுங்கள்.

குடும்ப உறுப்பினர்கள் அல்லது குழுவினரின் அனுமதி பெறாமல் புகைப்படங்களையோ பாதிப்புக்குள்ளாக்கும் விவரங்களையோ பயன்படுத்த வேண்டாம்.

அனுமதி கிடைக்க வாய்ப்பு இல்லாதபோது விவரங்களை வெளிப்படுத்துவதை குறைத்துக்கொள்ளுங்கள், அது அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உணர்வு ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

அறிக்கை மற்றும் தகவல்கள் வாயிலாக போராட்ட குழுக்களின் அனைத்து உறுப்பினர்களையும் மனிதத்தன்மையற்ற மற்றும் இழிவுப்படுத்தும் செயலை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

-http://www.tamilwin.com

TAGS: