ஆப்கானில் தாலிபான்கள் தற்கொலைத் தாக்குதல்:14 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆறு கால்துறையினர், எட்டு பொதுமக்கள் உட்பட குறைந்தது 14பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்

நாட்டின் வடக்கே பர்வான் மாகாணத்தில் இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதலில் பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

அங்காடி மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றுக்கு அருகில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இத்தாக்குதலுக்கு தாங்களே காரணம் என தாலிபான்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளனர்.

அவர்களை எப்படி மீண்டும் பேச்சுவார்த்தை மேடைக்கு கொண்டுவருவது என்பது குறித்த நான்கு நாடுகள் பங்குபெறும் மாநாடு செவ்வாய்கிழமை தொடங்கவுள்ள நிலையில், திங்களன்று இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. -BBC