‘நஜிப் வழக்கு தொடுக்கவில்லை என்றால் WSJ கூற்றில் உண்மை இருக்கத்தான் வேண்டும்’

trயுஎஸ்$1 பில்லியனுக்குமேல்  அவரது  வங்கிக்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டிருப்பதாகக் கூறி  இருக்கும்   வால்  ஸ்திரிட்  ஜர்னல்  மீது  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  வழக்கு  தொடுக்க  வேண்டும்  என்று  முன்னாள்   பிரதமர்    டாக்டர்  மகாதிர்  முகம்மட்  வலியுறுத்தியுள்ளார்.

நஜிப்  வழக்கு  தொடுக்கவில்லை  என்றால்  WSJ  செய்தியில்  ‘ஓரளவு  உண்மை  இருக்கத்தான்  வேண்டும்’  என்றவர்  அழுத்திக்  கூறினார்.

“அது  உண்மை  இல்லை  எனில்  தப்பான  செய்தியை  வெளியிட்டதற்காக   பிரதமர்   சட்ட  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்.

“அவர்களின்  நாட்டிலேயே  வழக்கு  தொடுக்கலாம்.  பிரதமர்  அதைச்  செய்யவில்லை  என்றால்  கூறப்பட்டிருப்பதில்  ஓரளவு  உண்மை  உண்டு  என்றுதான்  அர்த்தம்”, என  மகாதிர்  கூறினார்.