முகைதின் அம்னோவில் தொடர்ந்து இருப்பார்

remainமுகைதின் யாசின்,  அம்னோவில் தொடர்ந்து இருக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால்,  கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட  விவகாரத்தை  அவர்  சங்கப்  பதிவகத்திடம்  கொண்டு  செல்வார்.

“அம்னோவில்  தொடர்ந்து  இருப்பேன். கட்சியிலிருந்து வெளியேறும்  பேச்சுக்கே இடமில்லை. அப்படி  நான்  சொன்னதில்லை” என்று  முகைதின்  இன்று  செய்தியாளர்  கூட்டத்தில் தெரிவித்தார்.

“சங்கப்  பதிவதிகாரிக்குக்  கடிதம்  எழுதப்  போகிறேன்.  அவர்கள்  முடிவு  செய்யட்டும்  இடைநீக்கம்  முறைப்படிச்   செய்யப்பட்டதா  என்பதை”, என்றாரவர்.