முக்ரிஸ்: நானும் முகைதினும் ஏன் அம்னோவிலேயே தங்கி விட்டோம் என்பதைத் தந்தை அறிவார்

muk mahமுன்னாள்  கெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிர்  அவரின்  தந்தையைப்  பின்பற்றி  அம்னோவிலிருந்து   வெளியேறப்போவதில்லை.

இன்று  மலேசியாகினியிடம்  பேசியபோது  இதனைத்  தெரிவித்த  முக்ரிஸ், தம்  முடிவு  தம்  தந்தையான  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்கும்  தெரியும்  என்றார்.

“நேற்று  துன்னுடன் (மகாதிருடன்)  பேசினேன். நானும்  முகைதினும் எதற்காக  இந்த  நிலைப்பாட்டை  எடுத்தோம்  என்பதை  அவர்  அறிவார்.”,  என்றாரவர்..

2008-இலும்   இதே  முடிவைத்தான்  எடுத்ததாக  முகிரிஸ்  தெரிவித்தார்.

“2008-இல்  என்  தந்தை  விலகினார். நான்  விலகப்போவதில்லை  என்பதைச்  செய்தியாளர்களை  அழைத்து  அறிவித்தேன்”,  என்றார்.