பக்கத்தான் ஹராபான் ஏப்ரல் 2ஆம் தேதி, பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தும். ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவுபெறும் வேளையில் இப்பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இன்று கோலாலும்பூர் பிகேஆர் தலைமையகத்தில் பக்கத்தான் ஹராபான் தலைமைச் செயலாளர் சைபுடின் அப்துல்லா இதனைத் தெரிவித்தார்.
“இது நாங்கள் ஜிஎஸ்டியைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம் என்பதைக் காண்பிக்கிறது”, என்றாரவர்.
ஜி.எஸ்.டி. அமுலுக்கு வந்த உடனேயே, அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்[எதிர்கட்சியினர் உட்பட] 200 விழுக்காடு வரை சம்பள உயர்வு கொடுக்கப்பட்டது. இதனால் நீங்களும் சிறிது காலம் இந்த ஜி.எஸ்.டி. பற்றி அவ்வளவாக வாயை திறக்கவில்லை. தற்சமயம் முக்கிய issue வேறு எதுவும் இல்லாததால் இந்த ஜி.எஸ்.டி. பிரச்சினையை இப்போது கிளப்புகிறீர்களோ! எது எப்படியோ, இதுவும் நல்ல காரியமே.
ஜி எஸ் டி யால்சாதாரண மக்களின் அவஸ்தை சுகவாசியான உங்களுக்கு எங்கே புரியும் ? இப்பொழுதுதான் தூக்கதிலிருந்து விழித்தீர்களோ ?