பக்கத்தான் ஹராபான் ஏற்பாட்டில் ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணி

pakபக்கத்தான்  ஹராபான்  ஏப்ரல்  2ஆம்  தேதி,  பொருள், சேவை  வரி(ஜிஎஸ்டி) எதிர்ப்புப்  பேரணி  ஒன்றை  நடத்தும். ஜிஎஸ்டி  அமலாக்கம்  செய்யப்பட்டு  ஓராண்டு  நிறைவுபெறும்  வேளையில்  இப்பேரணிக்கு  ஏற்பாடு  செய்யப்பட்டிருக்கிறது.

இன்று  கோலாலும்பூர்  பிகேஆர்  தலைமையகத்தில்  பக்கத்தான்  ஹராபான்  தலைமைச்  செயலாளர்  சைபுடின்   அப்துல்லா  இதனைத்  தெரிவித்தார்.

“இது  நாங்கள்  ஜிஎஸ்டியைத் தொடர்ந்து  எதிர்த்து  வருகிறோம்  என்பதைக்  காண்பிக்கிறது”, என்றாரவர்.