1எம்டிபி அறிக்கை: அதிகாரப்பூர்வ ஊடகங்களுக்கு மட்டுமே அனுமதி

only1எம்டிபி மீதான  விசாரணை  அறிக்கை  பலமுறை  தாமதிக்கப்பட்டு  ஒரு  வழியாக  இன்று  நாடாளுமன்ற  பொதுக் கணக்குக்  குழு(பிஏசி)விடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால்,  அறிக்கை  ஒப்படைக்கப்படும்  நிகழ்வுக்குச்  சென்று  செய்திகள்  சேகரிக்க  அரசாங்க  ஊடகங்களான  ஆர்டிஎம்- மையும்  பெர்னாமாவையும்  தவிர  மற்ற  ஊடகங்கள்  அனுமதிக்கப்படவில்லை.

அவை  நாடாளுமன்றத்துக்குள்  செல்ல  முயன்றபோது  வாயிலில்  நின்ற  பாதுகாவலர், “மன்னிக்க  வேண்டும். ஆர்டிஎம்  மட்டுமே உள்ளே  செல்ல  முடியும்”, என்றார்.

பின்னர்  பெர்னாமா  நிருபர்கள்  வந்தார்கள்.  அவர்களும்  உள்ளே  செல்ல  அனுமதிக்கப்பட்டனர்.

மற்ற  ஊடகங்களைச்  சேர்ந்தவர்கள்  வெளியிலேயே  நிற்க  வேண்டியதாயிற்று.