1எம்டிபி மீதான விசாரணை அறிக்கை பலமுறை தாமதிக்கப்பட்டு ஒரு வழியாக இன்று நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு(பிஏசி)விடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், அறிக்கை ஒப்படைக்கப்படும் நிகழ்வுக்குச் சென்று செய்திகள் சேகரிக்க அரசாங்க ஊடகங்களான ஆர்டிஎம்- மையும் பெர்னாமாவையும் தவிர மற்ற ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை.
அவை நாடாளுமன்றத்துக்குள் செல்ல முயன்றபோது வாயிலில் நின்ற பாதுகாவலர், “மன்னிக்க வேண்டும். ஆர்டிஎம் மட்டுமே உள்ளே செல்ல முடியும்”, என்றார்.
பின்னர் பெர்னாமா நிருபர்கள் வந்தார்கள். அவர்களும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மற்ற ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் வெளியிலேயே நிற்க வேண்டியதாயிற்று.
நாட்டில் அறிவார்ந்த சொத்துமைக்கு சுதந்திரம் உள்ளதாக மார்த்தட்டும் அம்னோ, மக்களை முட்டாள்களாக்க எப்படியொல்லாம் பாடுபடுகிறது!