நந்திக்கடலிற்கு ஒன்றாக சென்ற பிரபாகரன், பொட்டு அம்மான்..! திரும்பி வந்த பிரபாகரன்: சரத் பொன்­சேகா

pottuammam1புலி­களின் தலைவர் பிர­பா­கரன் மற்றும் பொட்டு அம்மான் உள்­ளிட்ட சிலர் இறுதி யுத்­தத்­தின்­போது நந்­திக்­கடல் தென் பகு­திக்கு தப்பிச் சென்­ற­தாக கே.பி.கூறி­யி­ருக்­கிறார். அத்­துடன் பிர­பா­கரன் திரும்பி வந்­த ­தா­கவும் பொட்டு அம்மான் வர­வில்லை என்றும் அவர் கூறி­யி­ருக்­கின்றார்.

அந்த தகவல் மட்­டுமே எங்­க­ளுக்கு தெரியும்.   பொட்டு அம்மான் அந்த இடத்தில் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என்று நான் நினைக்­கின்றேன் என்று  முன்னாள் இரா­ணுவ தள­ப­தியும் அமைச்­ச­ரு­மான பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா  தெரி­வித்தார்.

பிர­பா­க­ரனை கொழும்­புக்கு அழைத்து வந்­தி­ருந்தால் இப் போது கே.பி.யை அரச அரண்­ம­னையில் வைத்­தி­ருந்­ததைப் போன்று அவ­ரையும் பாது­காப்­பாக வைத்­தி­ருந்­தி­ருப்­பார்கள். அத்­துடன் அவ­ருக்கு வட­கி­ழக்கு முத­ல­மைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டிருக்கும் என்­பதில் எனக்கு எந்த சந்­தே­க­மு­மில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்கை மன்றக் கல்­லூ­ரியல் இன்று இடம்­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் அமைச்சர் சரத் பொன்­சேகா கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

யுத்தம் முடிந்த பின்னர் மஹிந்­தவின் பிள்­ளைகள் சுக­போ­க­மாக காலத்தை கழித்­தார்கள். காலை­முதல் மாலை­வரை ரகர் விளை­யா­டினர். போட்­டியில் தோல்­வி­ய­டை­யும்­போது நடு­வர்­களை தாக்­கினர். ரசி­கர்­களை தாக்­கினர்.  இது­தானா அபி­வி­ருத்­தியின் பிரதிபலன்?

கடந்த அர­சாங்­கத்தில் ஊட­கங்­க­ளுக்கு உண்மை தன்­மையை வெளிப்­ப­டுத்த முடி­ய­வில்லை. வெளிப்­ப­டுத்­தினால் தொழில் அற்­றுப்­போகும். அதி­க­மான ஊட­க­வி­ய­லா­ளர்­களை பலாத்­கா­ர­மாக தங்கள் பக்கம் இழுத்­துக்­கொண்­டார்கள்.

ஊடக நிறு­வ­னங்கள் அர­சாங்கம் தொடர்பில் உண்மை தன்­மையை வெ ளிப்­ப­டுத்­தினால் அவர்­களின் அனு­ம­திப்­பத்­தி­ரத்தை செய­லி­ழக்­கச்­செய்­வ­தாக பகி­ரங்­க­மாக தெரி­வித்­தனர்.

நாட்டின் சட்­டத்தை கையி­லெ­டுத்­துக்­கொண்­டி­ருந்­தனர். நாட்டில் அவர்­க­ளுக்கு தேவை­யா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தொடுத்­தார்கள்  விரும்­பி­ய­வர்­களை விடு­வித்­தார்கள்.

அதே­போன்று நீதி­மன்­றங்­க­ளுக்கு தனக்கு தேவை­யா­ன­வர்­களை நிய­மித்­தனர். அவர்­க­ளுக்கு எதி­ராக செற்­பட்­ட­வர்­களை பதவி நீக்­கி­னார்கள்.  முன்னாள் பிர­தம நீதி­ய­ர­ச­ருக்கு   என்ன நடந்­தது என்ற முழு­நாட்­டுக்கும் தெரியும் . இவ்­வாறு தான் அதி­கா­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்தார்.

மக்கள் பீதியில்  வாழ்ந்­தனர். அன்­றி­ருந்த பயம் இன்று இருக்­கின்­றதா ? இன்று அந்த நிலைமை யாருக்கும் இல்லை. அந்த வித்­தி­யா­சத்தை நாட்­டுக்கு கொண்­டு­வந்தோம்.  நாங்கள் உயிரை பணயம் வைத்து பெற்ற சுதந்­தி­ரத்தை மீண்டும் இழக்க ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம்.

-http://www.tamilwin.com

TAGS: