மகாதிர் மலேசியாவைக் காக்க அல்ல, அழிக்க விரும்புகிறார்

sallehமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  மலேசியாவைப்  பாதுகாக்க  நினைக்கவில்லை  மாறாக  அழிக்க  விரும்புகிறார்  எனத்  தொடர்பு, பல்லூடக  அமைச்சர்  சாலே  சைட் கெருவாக்  கூறினார்.

வெள்ளிக்கிழமை  மகாதிர்  அம்னோ  உறுப்பினர்களுக்கு  எழுதிய  திறந்த  மடல்மீது  கருத்துரைத்த  சாலே,  முன்னாள்  பிரதமர்  ஆளும்  கட்சியை  முனைப்பாக  இருக்கிறார்  என்றார்.

“அவரது  செயல்களே  அவர்  அம்னோவை  விரும்பவில்லை, அதை  அழிப்பதுதான்  அவரின்  நோக்கம்  என்பதற்குச்  சான்றாகும்.

“மகாதிர்  கட்சியிலிருந்து  விலகி  எதிரணியினருடன்  சேர்ந்து  சதி  செய்கிறார்.  அவருக்கு  நம்  கட்சி  விவகாரங்களில்  தலையிட  உரிமை  இல்லை”, என  சாலே  அவரது  வலைப்பதிவில்  குறிப்பிட்டிருந்தார்.

ஜனநாயக  முறைப்படி  தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசாங்கத்தைக்  கவிழ்க்க  எதிரிகளுடன்  சேர்ந்து திட்டமிடுவது  மலேசியாவைக்  காப்பதற்கு  அல்ல  அழிப்பதற்கு”,  என்றாரவர்.