1எம்டிபி விசாரணைக்காக அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் மலேசியா வருகை

officialஅமெரிக்க  நீதித்துறை  அதிகாரிகள்  1எம்டிபி  விசாரணை  தொடர்பில்  தனிப்பட்ட  சிலரைச்  சந்திப்பதற்கு   மலேசியா  வந்திருக்கிறார்களாம்.  பெயர்  குறிப்பிடப்படாத  வட்டாரங்களை  மேற்கோள்காட்டி  ராய்ட்டர்ஸ்  செய்தி  இவ்வாறு  அறிவித்துள்ளது.

செய்தியை  உறுதிப்படுத்திக்கொள்ள  மலேசியாகினி  அமெரிக்க  நீதித்துறையைத்  தொடர்பு  கொண்டுள்ளது.

1எம்டிபி  ஊழல்  குறித்து  சுவிட்சர்லாந்து,  பிரிட்டன்,  அமெரிக்கா,  லக்ஸ்ம்பர்க்,  சிங்கப்பூர்,  ஹாங்காங்  அதிகாரிகள்  விசாரணை  செய்து  வருகிறார்கள்.