துப்பாக்கிக்காரன் அலோர் ஸ்டார் சிறைச்சாலையை நோக்கி 10 தடவை சுட்டான்

shotநேற்றிரவு   மணி  10.30  அளவில், துப்பாக்கிக்காரன்  ஒருவன்  அலோர்  ஸ்டார்  சிறைச்சாலையை  நோக்கி  10  தடவை  சுட்டிருக்கிறான்.

சிறை  வார்டன்  முகம்மட்  பிட்ரி  அப்துல்  ஸமான்,31,  காவல்  அறையில்  தான்  மட்டுமே  கடமையில்  இருந்ததாகவும்  அப்போது  இருவர்   மோட்டார்  சைக்கிளில்  வந்ததாகவும்  தெரிவித்தார்.
“அவர்களில்  ஒருவன்  மோட்டார்  சைக்கிளைவிட்டு  இறங்கி  காவல்  அறையை  நோக்கி  ஆறு  தடவை  சுட்டான். பீன்னர்  கண்காணிப்புக்  கோபுரத்தை  நோக்கி  நான்கு  முறை  சுட்டான்”, என்றவர்  பெர்னாவிடம்  கூறினார்.

பிட்ரி  தரையோடு  தரையாக  படுத்துக்  கொண்டதால்  துப்பாக்கித்  தோட்டாக்களிலிருந்து  தப்பினார்.  கண்காணிப்புக்  கோபுரத்தில்  இருந்தவர்களிலும்   யாரும்  காயமடையவில்லை.

அச்சம்பவம்  பற்றி போலீஸ்  விசாரணை  செய்து  வருகிறது.