கோபத்தால் வந்த மரணம்..!

angry_001அதிகம் கோபப்படுவதால் பெண் ஒருவர் மரணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த முதலாம் திகதி 83 வயதான பெண்ணொருவர் சிலாபம் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் அதிகம் கோபமடைந்ததன் விளைவாக அவரது மூளை வீக்கமடைந்து உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் 29ஆம் திகதி தனது அயல்வீட்டுப் பெண்ணுடன் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு அதிகம்
கோபமடைந்த நிலையில் காணப்பட்டதாக பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் 9 பிள்ளைகளின் தாய் என குறிப்பிட்டுள்ள பொலிஸார்,இவரின் மரணத்தை அடுத்து அயல்வீட்டுப் பெண்ணைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

-http://www.tamilwin.com