மலாக்காவில் சர்ச்சைக்குரிய முஸ்லிம் பிரச்சாரகர் டாக்டர் ஜாகீர் நாயக் கலந்துகொள்ளவிருந்த கருத்தரங்கம் ஒன்றை இரத்துச் செய்யுமாறு போலீஸ் உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 17-இல், மலாக்காவில் மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் அக்கருத்தரங்கம் நடைபெறுவதாக இருந்தது. அதனை இரத்துச் செய்யுமாறு கூறுவதற்கு அந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் எனப் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார்.
அந்நிகழ்வில் ஜாகீர் ‘இந்து சமயத்துக்கும் இஸ்லாத்துக்குமிடையிலான ஒற்றுமைகள்’ என்னும் தலைப்பில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சமயங்களை ஒப்பிட்டுப் பேசும்போது பிரச்சாரகர் ஒரு சமயத்தின் பலவீனங்களையும் தொட்டுப் பேசாமல் இருக்க முடியாது என்று கூறிய காலிட், அது நாட்டுக்கு நல்லதல்ல என்றார்.
இந்தியனுக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு ! அதில் ஒன்று , கிறிஸ்துவனாக மாறினால், இவன் நடிப்பில் 12 அப்போஸ்தளர்களும் ஏமாந்து விடுவார்கள் !! அதுவே இவன் இஸ்லாம் மதத்துக்கு மாறினால், அந்த மதப்பரப்புரையில் அரபியர்களும் தோற்று போவார்கள் !!! எது எப்படியோ இந்த இரண்டு தரப்பினருக்கும் கிடைத்த இளிச்சவாயன்தான் ஹிந்து . எனிவே …தேங்க்ஸ் போர் IGP
இவனின் பேச்சு இந்து-முஸ்லிம் இடையில் உள்ள ஒற்றுமையாக இருக்காது. தென் ஆப்ரிக்காவில் ஒரு இந்திய வம்சாவழி முஸ்லிம் ஒருவன் இப்படித்தான் மற்ற மதங்களை குறை கூறி சாடி மட்டமாக பேசுவான். அறிவு-பகுத்தறிவு பூர்வமாக விவாதம் செய்யலாம்– ஆனால் இவன்கள் எப்போதும் அவன்களின் மத நூலைத்தான் ஆதாரமாக குறுப்பிடுவான்கள்– இந் நிலையில் எப்படி அறிவு பூர்வமாக விவாதிக்க முடியும்? ஒருகாலத்தில் இந்த நாட்டில் இனங்களிடையே ஒற்றுமை இருந்தது இப்போது எல்லாமே நாறிப்போய் விட்டது.
தாப்பா பாலாஜி என் தாய் தமிழன் நன்றாகச் சொன்னீர் .
தந்தை பெரியார் கூறினார் ; ஒரு மதத்தை பின் பற்றுகிறவன் இன்னொரு மதத்தை குறை கூறக்கூடாது என்று. இதை அனைவரும் உணர்ந்தால் நலம். பொதுவாக எல்லா மதங்களுமே மனிதனால் உருவாக்கப்பட்டவை தான் .எதுவுமே வானத்திலிருந்தோ , கடலிலிருந்தோ , மண்ணிலிருந்தோ உருவாக வில்லை ! காட்டப்பட்ட எல்லா வீடுகளுமே கால போக்கில் ஓட்டை ஒடிச்சலாகத்தான் காட்சியளிக்கும் ; இதை உணராத அப்பாவிகள்தான் எங்கள் வீடுதான் சிறப்பானது என்று பீற்றிகொள்வார்கள் !அத்தகைய அப்பாவிகளில் ஒருவர்தான் இந்த ஜாகீர் நாய்க். . இதில் வேடிக்கை என்னவெனில் முசுலிமக இருந்தாலும் ” நாய்க் ” என்ற சாதி பெயரும் இந்துக்கள் போல கூடவே வருவதுதான் ! நமது அப்துல் கனி பட்டேல் போல !
“நிறை மாந்தன் பிறர் குறை காண்பதில்லை, அரைவேக்காடுகள்தாம் அடுத்தவரைப் பழித்து தம்மை உயர்த்திக் காட்டிக் கொள்ள முயலும்” இது மதவாதிகளுக்கும் பொருந்தும்