மலாக்காவில் ஜாகீர் நாயக்கின் நிகழ்வை இரத்துச் செய்ய போலீஸ் உத்தரவு

forumமலாக்காவில்  சர்ச்சைக்குரிய  முஸ்லிம்  பிரச்சாரகர்  டாக்டர்  ஜாகீர்  நாயக்  கலந்துகொள்ளவிருந்த  கருத்தரங்கம்  ஒன்றை  இரத்துச்  செய்யுமாறு  போலீஸ்  உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல்  17-இல்,  மலாக்காவில்  மலேசிய  தொழில்நுட்பப்  பல்கலைக்கழக  வளாகத்தில்  அக்கருத்தரங்கம்   நடைபெறுவதாக  இருந்தது. அதனை  இரத்துச்  செய்யுமாறு  கூறுவதற்கு  அந்நிகழ்வின்  ஏற்பாட்டாளர்கள்  புக்கிட்  அமானுக்கு  அழைக்கப்பட்டிருக்கிறார்கள்  எனப்  போலீஸ்  படைத் தலைவர்  காலிட்  அபு  பக்கார்  கூறினார்.

அந்நிகழ்வில்  ஜாகீர்  ‘இந்து சமயத்துக்கும்  இஸ்லாத்துக்குமிடையிலான  ஒற்றுமைகள்’  என்னும்  தலைப்பில்  பேசுவதற்கு  ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது.

சமயங்களை  ஒப்பிட்டுப்  பேசும்போது  பிரச்சாரகர்  ஒரு  சமயத்தின்  பலவீனங்களையும்  தொட்டுப்  பேசாமல்  இருக்க  முடியாது என்று  கூறிய  காலிட்,  அது  நாட்டுக்கு  நல்லதல்ல  என்றார்.