கையூட்டு பெற்ற சந்தேகத்தின்பேரில் இன்ஸ்பெக்டரும் கார்ப்பரலும் தடுத்து வைக்கப்பட்டனர்

corpகோத்தா  கினாபாலுவில்  போலீஸ்  போதைப்பொருள்  பிரிவைச்  சேர்ந்த  இன்ஸ்பெக்டர்  ஒருவரும்  கார்ப்பரல்  ஒருவரும்  மொத்தம்  ரிம9,800  கையூட்டு  பெற்றார்கள்  என்ற  சந்தேகத்தின்பேரில்  நான்கு  நாள்களுக்குத்  தடுத்து  வைக்கப்பட்டனர்.

31, 37  வயது  நிரம்பிய  அவ்விருவரையும்  மலேசிய  ஊழல்  தடுப்பு  ஆணையம்  ஏப்ரல்  12  இரவு  மணி  11.50க்குக்  கைது  செய்தது.

போதைப்பொருள்  உட்கொண்ட  ஒருவர்மீது  நடவடிக்கை  எடுக்காதிருக்க  அவர்கள்  பணத்தைக்  கையூட்டாக  பெற்றார்கள்  என்று  கூறப்பட்டது.

-பெர்னாமா