தங்கள் வீரர்களின் உடல் உறுப்புகளையே கடத்தும் ஐ.எஸ். அமைப்பு: அதிர்ச்சி தகவல்

isis_001ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு போரில் காயமடைந்த தங்கள் வீரர்களின் உடல் உறுப்புகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பெரும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. அமெரிக்கா, நேட்டோ, ரஷ்யா போன்ற நாடுகளின் படைகள் நடத்திய தொடர் தாக்குதல் காரணமாக ஐ.எஸ். அமைப்பு தங்களின் 22 சதவீத எல்லையை இழந்துள்ளது. பல்வேறு எண்ணெய் கிணறுகள் அழிக்கப்பட்டு விட்டதால். அதன் வருவாயும் பெருமளவு குறைந்துள்ளது.

இதனை சரிகட்டுவதற்காக போர்களில் காயமடைந்துள்ள தங்கள் வீரர்களின் உடல் உறுப்புகளை ஐ.எஸ்.அமைப்பு கடத்துவதாக அல் சாபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காயமடைந்த வீரர்களின் சிறுநீரகம், இதயம் உள்ளிட்டவற்றை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர் உறுப்புகளை அகற்ற மறுக்கும் மருத்துவர்களையும் அவர்கள் கொலை செய்வதாக மிரட்டி வருகின்றனர் என்று அந்த பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே தங்களிடம் உள்ள பிணையக் கைதிகளை கட்டாயப்படுத் திஇரத்த தானம் கொடுக்க வைப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஈராக்கின் நகர் ஒன்றில் உள்ள மருத்துவமனையில் நடத்திய சோதனையில் உடல் உறுப்புகள் அகற்றப்பட்ட 183 சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

-http://news.lankasri.com