1எம்டிபி விசாரணை தொடர்பில் ஹாங்காங்கில் பல வங்கிக் கணக்குகள் முடக்கம்

hkஉலகின்  பல  நாடுகளில்  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனத்தின் (1எம்டிபி)மீது  விசாரணை  நடக்கின்ற  வேளையில்  ஹாங்காங்கில்  தனிப்பட்ட  பலரின்  வங்கிக்  கணக்குகள்  முடக்கப்பட்டுள்ளன.

மலேசியாவுக்கு  வெளியே  பெயர்  குறிப்பிடப்படாத    தனிப்பட்டவர்கள்  பலர்  விசாரிக்கப்பட்டு  வருவதாக   நியு யோர்க்கைத்  தளமாகக்  கொண்டுள்ள  நிதியியல்  ஊடகமான  புளூம்பர்க்  அறிவித்தது.

வங்கிக்  கணக்குகளை  முடக்கும்படி  ஹாங்காங்  அதிகாரிகள்  உத்தரவிட்டார்களா   அல்லது  வங்கிகள்  தாமே  அதைச்  செய்தனவா  என்பது  தெளிவாகத்  தெரியவில்லை.

இதனிடையே  ஹாங்காங்  ஊழல்-தடுப்புத்  துறையும்  போலீசும்  தாங்கள்  தனிப்பட்ட  வழக்குகள் குறித்துக்  கருத்துரைப்பதில்லை  எனக்  கூறின.