தொலைக்காட்சி நிகழ்ச்சி இரத்தானதற்கு நஜிப்பே காரணம்- மகாதிர்

comedyமுன்னாள்  பிரதமர் டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  நாளை  நகைச்சுவைக்  கலைஞர்  ஹரித்  இஸ்கண்டருடன்  தாம்  கலந்துகொள்ளவிருந்த  தொலைக்காட்சி  ரகளை  நிகழ்ச்சி  இரத்துச்  செய்யப்பட்டதற்குப் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்தான்  காரணம்  என்கிறார்.

“அவருடன்  அந்நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு  நகைச்சுவையாகக் கருத்துப்  பரிமாற்றம்  செய்துகொள்வதாக இருந்தது.

“அதுதான்  நோக்கம்,  ஏனென்றால்  அவர்  ஒரு  நகைச்சுவைக்  கலைஞர்,  அரசியல்வாதி  அல்லர்.

“திடீரென்று  அந்நிகழ்ச்சியை  நிறுத்துமாறு  உத்தரவு  வந்தது.  அதுதான்  நஜிப்பின்  வழி”, என  இன்று  சுங்கை  புசாரில்  உரையாற்றியபோது  மகாதிர்  கூறினார்.

ஹரித்  இஸ்கண்டர்  ஆஸ்ட்ரோ  அவானியில் ‘Obviously Harith Iskander’  என்ற  நிகழ்ச்சியை  நடத்தி  வருகிறார். சனிக்கிழமைகளில்  இரவு  மணி  9.30க்கு  அது  ஒளியேறுகிறது.