பூச்சோங்கில் குண்டு வெடிப்பு: எண்மருக்குக் காயம்

bombபூச்சோங் ஐஓஐ போல்வார்டில்  இரவு  விடுதி  ஒன்றுக்கு   முன்புறம்  நிகழ்ந்த  குண்டு வெடிப்பில்  எண்மர்  காயமடைந்தனர்.

குண்டு  வெடிப்பு  இரவு  மணி  1.30க்கு  நிகழ்ந்ததாக சிலாங்கூர்  போலீஸ்  துணைத்  தலைவர்  அப்துல்  ரகிம்  ஜாப்பார்   தெரிவித்ததாக  த  ஸ்டார்  ஆன்லைன்  கூறியது.

ஒரு  கையெறிக்குண்டுதான்  அந்த  வெடிப்புக்குக்    காரணம்  என்பதை  உறுதிப்படுத்திய  ரகிம்   அதை   மதுபான  விடுதியை  நோக்கி  வீசி  எறிந்தவரை  போலீஸ்  தேடி  வருகிறது  என்றும்  கூறினார்

குண்டு  வெடிப்பு  நிகழ்ந்தபோது  அவ்  விடுதியில்  சுமார்  20  பேர் ஈரோ  2016  கால்பந்து  போட்டியில்  ஸ்பேய்னுக்கும்  இத்தாலிக்குமிடையிலான  ஆட்டத்தைப்  பார்த்துக்  கொண்டிருந்தார்கள்.