அடுத்த பொதுத் தேர்தலில் பல்முனைப் போட்டிதான், வேறு வழியில்லை- அமனா

multiபார்டி  அமனா  ரக்யாட்,   அடுத்த  பொதுத்  தேர்தலில்  பிஎன்னையும்  பாஸையும்  எதிர்த்து  பல்முனைப்  போட்டிகளில்  ஈடுபட  வேண்டியிருக்கும்  என்பதை  அதன்  பக்கத்தான்  ஹராபான்  தோழமைக்  கட்சிகளுக்கு  நினைவுபடுத்தியது.

இதனை  எதிர்கொள்ள  கூட்டணி  தன்னைத்  தயார்படுத்திக்  கொள்ள  வேண்டும்  என  அமனா  தொடர்பு  இயக்குனர்   காலிட்  சமட்  நேற்றிரவு  ஒரு  கருத்தரங்கில்  கூறினார்.

“விரும்புகிறோமோ  இல்லையோ,   மும்முனைப்   போட்டி  என்பது   ஒரு  அரசியல்  நிதர்சனம்  என்பதை  ஏற்றுக்கொள்ளத்தான்  வேண்டும்.

“இல்லை   நேரடிப்  போட்டிதான்   வேண்டும்  என்று  சொல்வதில்  அர்த்தமில்லை”,  என்றவர்  வலியுறுத்தினார்.

கடந்த  பொதுத்  தேர்தலில்  பாஸ்  அது  போட்டியிட்ட  இடங்களை   விட்டுக்  கொடுக்காது.  அது  போட்டியிடாத  இடங்களிலும்கூட  அதன்  வேட்பாளர்களைக்   களமிறக்கும்  என்று  காலிட்  கூறினார்.