ஜோ லோ மற்றும் குடும்பத்தாரின் எஸ்$120 மில்லியனை சிங்கை அதிகாரிகள் கைப்பற்றினர்

jho1எம்டிபி   விசாரணைகளின்  தொடர்பில்   சிங்கப்பூர்    அதிகாரிகள்  மொத்தம்  எஸ்$240 மில்லியன்   மதிப்புள்ள   வங்கிக்  கணக்குகளையும்   சொத்துக்களையும்   கைப்பற்றியுள்ளனர்.  அதில்   எஸ்$120 மில்லியன்  தொழில்   அதிபர்   ஜோ  லோவுக்கும்   அவரின்  குடும்பத்தாருக்கும்   சொந்தமானது.

சிங்கப்பூர்    சட்டத்துறைத்   தலைவர்  அலுவலகம்,   சிங்கப்பூர்   போலீஸ்   வர்த்தக   விவகாரப்  பிரிவு,   சிங்கப்பூர் நாணய ஆணையம்   ஆகியவை  இன்று    விடுத்த   கூட்டறிக்கை   இதனைத்   தெரிவிக்கிறது.