சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் அவரது நாட்டைப் பற்றி கவலைப்பட வேண்டும், மலேசியாவை பற்றி அல்ல

 

sarawakreporteditorமலேசியாவின் பொருளாதாரம் மற்று இதர விவகாரங்கள் பற்றி  கவலைப்படுவதற்கு மாறாக, சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல்-பிரவுன் அவரது நாட்டின் வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று அம்னோ சார்புள்ள வலைத்தளம் கூறுகிறது.

மலேசியாவை தாக்குவதற்கு முன்பு முதலில் அவர் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்வதுடன் தன் நாட்டையும் பார்க்க வேண்டும் என்று கூறிய அவலைத்தளம், நமது விவகாரங்களில் தலையிடுவதற்கு அவருக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால், அவர் இங்கு வருகையளிக்க வேண்டும். கைது ஆணையுடன் போலீசார் அவருக்காக காத்திருப்பார்கள் என்று அவ்வலைத்தளைம் மேலும் கூறிற்று.