நாம்வீ விசாரணைக்காக நான்கு நாள் தடுத்து வைக்கப்பட்டார்

nameweeவெளிநாட்டிலிருந்து நாடு   திரும்பிய    ரேப் கலைஞர்    நாம்வீ,   இயற்பெயர்   வீ   மெங்   சீ,   நேற்று   கோலாலும்பூர்   அனைத்துலக  விமான  நிலையத்தில்   கைது  செய்யப்பட்டு   இன்று      பினாங்கு   மெஜிஸ்திரேட்   நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டார்.

விசாரணைக்காக  அவரை  நான்கு  நாள்களுக்குத்  தடுத்து  வைக்க  மெஜிஸ்திரேட்  நீதிமன்ற   பதிவாளர்  தாஜுடின்    உத்தரவிட்டார்.

தைவான்  சென்று   விட்டு  நேற்று   நாடு  திரும்பிய   நாம்வீ,    பிற்பகல்     மணி   3.30    அளவில்   கோலாலும்பூர்  விமான  நிலையத்தில்   போலீசாரால்   கைது   செய்யப்பட்டார்.

பினாங்கில்   பல்வேறு  வழிபாட்டுத்    தலங்களில்  படம்  பிடிக்கப்பட்ட    அவரது    ‘Oh My God’காணொளி    இஸ்லாத்தை  அவமதிப்பதாக  பல  புகார்கள்    கிடைக்கப்பெற்றதை     அடுத்து   போலீசார்   விசாரணை   செய்வதற்காக    அவரைத்  தேடிக்  கொண்டிருந்தனர்.