டென்மார்கில் தமிழீழம் அங்கீகரிக்கப்பட்டமை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், டென்மார்க் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து வெளிவிவகார அமைச்சு மௌனம் காத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
டென்மார்க் குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள இணையத் தளத்தில் வீசா விண்ணம் செய்யும் நாடுகளின் வரிசையில் தமிழீழமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இணைய தளத்தில் வீசா விண்ணப்பம் செய்யும் நபரின் நாடு பற்றியே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காது மௌனம் காத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுயாதீனமான நாடு ஒன்றை அமைப்பதற்கு பௌதீக நிலப்பரப்பினை பார்க்கிலும், சர்வதேசத்தின் அங்கீகாரம் மிகவும் அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இலத்திரனியல் கருத்துக் கணிப்பில் தமிழ் ஈழம் பற்றிய விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-tamilwin.com
வணக்கம். அந்த நாடு என்ன இந்தியா போன்று கொலைகாரனுக்கு ஜால்ரா போடும் நாடு என்று நினைத்தார்களோ என்னவோ?
1. தமிழீழம் மலர வேண்டும்; தமிழருக்கென தனி நாடு உருவாகவேண்டும். தமிழீழத்தால் தமிழர்களுக்கு உலக அரங்கில் தனி மரியாதை கிடைக்கும். இன்று இந்தவுண்மை காலம் நமக்கு கற்றுத் தந்தப் பாடம். முதலில் நாமனைவரும் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு நாடு தமிழர்களின் இந்தப் போராட்டத்தை ஏற்றுக் கொண்டால், கொண்டுள்ளதால், நம் சுதந்திரப் போராட்டத்தில் உண்மையுண்டு. சரியான அணுகுமுறையைக் கையாண்டால் மற்ற நாடுகளின் ஆதரவும் நிச்சயம் கிட்டும். நம் போராட்டமும் வெற்றிப் பெரும். குறிப்பாக தமிழக மக்கள் இந்தவுண்மையை ஏற்றுக் கொண்டு அவர்களே இந்தப் போராட்டத்தை முன்னிருந்து நடத்த வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.