பெர்சேக்கு மரண எச்சரிக்கை விடுத்தோர் குறித்து தகவல் தெரிவித்தால் ரிம10,000 வெகுமதி

maria பெர்சே   செயலக   உறுப்பினர்களுக்கு   இஸ்லாமிய  தீவிரவாதிகள்   பாணியில்   மரண   எச்சரிக்கை     விடுத்தோர்  குறித்து      தகவல்    அளிப்போருக்கு   ரிம10,000   சன்மானம்   கொடுக்க   டிஏபி   எம்பிகள்   சிலர்      முன்வந்துள்ளனர்.

பெர்சே   தலைவர்   மரியா  சின்    அப்துல்லா,   முன்னாள்   தலைவர்   அம்பிகா   ஸ்ரீநிவாசன்,   அதன்   செயலாளர்    மந்திப்   சிங்    ஆகியோருக்கு  விடுக்கப்பட்டிருக்கும்   மிரட்டல்   குறித்து     கவலை   கொள்வதால்    அந்தச்  சன்மானத்   தொகையை   வழங்க   முன்வந்திருப்பதாக   செகாம்புட்  எம்பி   லிம்  லிப்   எங்    கூறினார்.

“நாங்கள்   பெர்சேயிடம்    பரிவு   கொண்டிருக்கும்   அக்கறையுள்ள   குடிமக்கள்.  அந்தப்  படங்களை   அனுப்பியவர்கள்   யார்  என்பதை   ஆதாரப்பூர்வமாகக்   காண்பிப்போருக்கு,  போலீசையும்   சேர்த்துத்தான்,    ரிம10,000   வழங்குகிறோம்”,  என்றாரவர்.

அம்மூவருக்கும்    அனுப்பப்பட்ட   படங்கள்     அவர்கள்   முழங்காலிட்ட   நிலையில்   இருப்பதையும்    முகமூடி    அணிந்த   ஒருவர்   அவர்களின்  கழுத்தில்   கத்தி    வைத்திருப்பதையும்   காண்பிக்கின்றன.