அவர் வாயை மூடிக் கொண்டிருப்பதே நல்லது: மகாதிரைச் சாடினார் நஸ்ரி

nazriடாக்டர்   மகாதிர்   முகம்மட்    தம்    அறிவீனத்தைக்   காண்பித்துக்  கொள்ளாமல்    வாயை    மூடிக்   கொண்டிருப்பதே    நல்லது     எனச்  சுற்றுலா,  பண்பாட்டு   அமைச்சர்    நஸ்ரி   அப்துல்   அசீஸ்   கூறினார்.

அரசாங்கத்திடம்   பணமில்லை     அதனால்    2017  பட்ஜெட்    அர்த்தமற்றது    என்று   மகாதிர்   கூறியிருப்பதற்கு    நஸ்ரி   இவ்வாறு   எதிர்வினை   ஆற்றியுள்ளார்.

“அரசாங்கத்திடம்   பணம்   இல்லை  என்றால்    அடுத்த    ஆண்டு   நாட்டை   எப்படி    ஆட்சி   செய்வது?”,  என  இன்று    பிற்பகல்    நாடாளுமன்ற    வளாகத்தில்    தம்மைச்   சந்தித்த   செய்தியாளர்களிடம்   நஸ்ரி   வினவினார்.

“தயை   செய்து    அவரை   வாயை   மூடிக்   கொண்டிருக்கச்   சொல்லுங்கள்”,  என்றாரவர்.

அவர்  வாயைத்  திறந்து   தம்  முட்டாள்தனத்தை   உறுதிப்படுத்துவதைவிட    வாயை  மூடிக்   கொண்டிருப்பதே   மேல்   என்றாரவர்.