ரபிசிக்கு எதிரான கைருல் அஸ்வானின் அவதூறு வழக்கு தள்ளுபடி

umnoமாராவில்  நிதி   மோசடி   நிகழ்ந்திருக்க   சாத்தியம்   உண்டு     என்று  கூறிய     பிகேஆர்  தலைமைச்   செயலாளர்   ரபிசி   ரம்லிக்கு     எதிரான    அம்னோ   துணைத்    தலைவர்   கைருல்    அஸ்வான்   ஹருனின்    அவதூறு   வழக்கை    கோலாலும்பூர்    உயர்   நீதிமன்றம்    இன்று   தள்ளுபடி   செய்தது.

ரபிசி   ஒரு  கணிப்பைச்   செய்து    அதன்   அடிப்படையில்தான்   அவ்வாறு  கூறியுள்ளார்   என்றும்   அவரது    கூற்றில்  தீய   நோக்கம்   இல்லை    என்றும்   நீதிபதி    எஸ்.நந்தபாலன்   தீர்ப்பளித்தார்.

“இது   மேல்விசாரணை   செய்வதற்கு   உரிய   ஒரு   விவகாரம்.  இதை  மக்கள்  நல   விவகாரமாகக்   கருத   வேண்டும்”, என  நீதிபதி   உரைத்தார்.

நீதிமன்ற  முடிவை  ரபிசியின்   வழக்குரைஞர்   வில்லியம்   லோங்   மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.