தற்காலிக நீர் விநியோக நிறுத்தம் நவம்பர் 15க்கு ஒத்திவைப்பு

waterஏற்கனவே    அறிவிக்கப்பட்டதுபோல்   நவம்பர்   முதல்   நாள்   போர்ட்   டிக்சன்,  சிரம்பான்,   ரெம்பாவ்,    கோலா  பிலா,   ஜெலாய்    வட்டாரங்களில்    குடிநீர்  விநியோகம்   தற்காலிகமாக   நிறுத்திவைக்கப்படாது.   அது   நவம்பர்   15க்கு   ஒத்திவைக்கப்பட்டுள்ளது..

இந்த   ஒத்திவைப்பால்   ஏற்படும்   அசெளகரியங்களுக்கு    ஆயர்   நெகிரி    செம்பிலான்   சென்.பெர்ஹாட்    மன்னிப்பு   கேட்டுக்கொண்டது.

சுங்கை   லிங்கி,   ஜெலாய்   நீர்  சுத்திகரிப்பு    ஆலைகளில்   பராமரிப்பு   வேலைகளை  மேற்கொள்வதற்கு   வசதியாக   அப்பகுதிகளில்   நீர் விநியோகம்   தற்காலிகமாக    நிறுத்தப்படுகிறது.

இதன்  தொடர்பில்   மேல்விவரம்   அறிய   விரும்புவோர்   ஆயர்   நெகிரி   செம்பிலானைத்    தொடர்பு    கொள்ளலாம்.  அதன்   தொலைப்பேசி   எண்கள்:  1-800-88-6982   அல்லது   06-6033500.