பெர்சே 5 நவம்பர் 19க்கு முன்பே வெற்றி பெற்றுவிட்டது, அம்பிகா கூறுகிறார்

ambikaஅதற்குள்ளாகவே   பெர்சே  5   வெற்றி   பெற்றுவிட்டது   என்றும்   நவம்பர்   19   பேரணி  அந்த   வெற்றியின்  கொண்டாட்டமாக     அமையப்  போகிறது    என்றும்    பெர்சேயின்   முன்னாள்   தலைவர்    அம்பிகா   ஸ்ரீநிவாசன்    கூறினார்.

“வாகனத்   தொகுதிகள்   நகரம்  நகரமாக   சென்றது    பெர்சே  5-க்கு   வெற்றியாகும்.

“அதற்குள்ளாகவே  வெற்றி  பெற்று  விட்டோம்.   அந்த   வெற்றியைத்தான்   19ஆம்   தேதி    கொண்டாடப்   போகிறோம்”,  என்று  அம்பிகா   கிள்ளானில்   காலைநேரச்   சந்தையில்   பெர்சே    பேரணிக்கு   ஆதரவு    திரட்டுவதற்காக   நடைபெற்ற   ஒரு   நிகழ்வில்    மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.