டொனால்ட் டிரம்பை கொல்ல வேண்டும்: மிரட்டல் விடுத்தது யார் தெரியுமா?

donald_9_001அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை கொல்ல வேண்டும் என இந்திய பெண் ஊடகவியலாளர் ஒருவர் விடுத்துள்ள மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த மோனிஷா ராஜேஷ் என்ற இளம்பெண் தற்போது பிரித்தானியாவில் குடியேறி கார்டியன் மற்றும் தி டெலிகிராப் ஆகிய இரண்டு பத்திரிகைகளுக்கு செய்திகள் எழுதி வருகிறார்.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்பின் வெற்றியால் அதிர்ச்சி அடைந்த சில அமெரிக்கர்கள் டுவிட்டரில் டிரம்பிற்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

Greg என்பவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘டொனால்ட் டிரம்பை கொல்ல வேண்டும் என நான் யாரையும் தூண்டவில்லை. ஆனால், யாராவது இம்முயற்சியை மேற்கொண்டால், அதனை பிழை இல்லாமல் செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

மேலும், ஜனாதிபதியாக பதவியேற்கும் ஜனவரி 20ம் திகதிக்குள் இச்சம்பவம் நிகழ வேண்டும்’ என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இப்பதிவினை ஆதரித்த மோனிஷா ராஜேஷ் ‘ஜனாதிபதியை கொலை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என டுவிட் வெளியிட்டுள்ளார்.

ஆனால், இந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே அதனை அவர் நீக்கியுள்ளார்.

டொனால்ட் டிரம்பிற்கு அமெரிக்கா முதல் சர்வதேச நாடுகள் வரை எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், தற்போது கொலை மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-http://news.lankasri.com