போலீசார் பெர்சே 5 பேரணிக்கென கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்

bersihபெர்சே   5  பேரணியின்போது   போலீசார்   நன்முறையில்    நடந்து  கொள்வதை   உறுதிப்படுத்த    அதிகாரிகள்   கண்காணிப்புக்   குழு  ஒன்றை  உருவாக்க   வேண்டும்    என    அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“புதிதாக  ஒன்றைப்  பரிந்துரைக்க   விரும்புகிறேன்  –  போலீசார்   கண்காணிப்பாளர்கள்   அடங்கிய   குழுவை    உருவாக்கி   பேரணியைக்  கண்காணிப்பதுடன்  போலீசார்   நன்முறையில்    நடந்து  கொள்வதையும்   உறுதிப்படுத்த    வேண்டும்”,  என   சுஹாகாம்  முன்னாள்   ஆணையர்   ஜேன்ஸ்   நாயகம்   இன்று  ஓர்   அறிக்கையில்    கூறினார்.

போலீசார்  மிரட்டலோ   தடங்கலோ  இன்றி     பேரணிப்  பங்கேற்பாளர்கள்   ஒன்றுகூடுவதற்கு    வழி  அமைத்துக்  கொடுக்க   வேண்டும்   என்றாரவர்.

அவர்கள்   போக்குவரத்தை   ஒழுங்குப்படுத்துவதுடன்   பங்கேற்பாளர்களுக்குப்   பாதுகாப்பும்   வழங்க   வேண்டும்.

அதேபோன்று   பெர்சேயும்   அதன்  பங்கேற்பாளர்களும்    பேரணி   அமைதியான  முறையில்    நடப்பதற்கு   போலீசுடன்   ஒத்துழைக்க   வேண்டும்   என்றாரவர்.