பெர்சே பேரணி கைது: மேலும் அறுவர் விடுதலை, ஆனால் மரியா சின் விடுவிக்கப்படவில்லை

bersihபெர்சே  பேரணியின்போது  கைதானவர்களில்  மூன்று  பக்கத்தான்  ஹராபான்  பிரதிநிதிகளும்   மூன்று  சமூக   ஆர்வலர்களும்   இன்று  விடுவிக்கப்பட்டனர்.

“டாங்   வாங்கி   போலீஸ்  நிலையத்தைவிட்டுப்  புறப்படுகிறோம்”  என  பத்து   எம்பி   தியான்   சுவா  டிவிட்டரில்   குறிப்பிட்டிருந்தார்.  அவர்    ஒரு   படத்தையும்  பதிவேற்றியிருந்தார்.

அதில்  அவருடன்  அம்பாங்   எம்பி   சுரைடா   கமருடின்,   பாசிர்  பிஞ்சி   சட்டமன்ற   உறுப்பினர்  ஹோவார்ட்   லீ,   பெர்சே   இயக்கக்  குழு  உறுப்பினர்   ஹிஷாமுடின்   ரயிஸ்,   ஓவியர்   பாஹ்மி   ரேஸா,  மாணவ   சமூக   ஆர்வலர்   முகம்மட்  லுக்மான்    நூல்  ஹக்கிம்   சுல்   ரசாலி   ஆகியோர்   காணப்பட்டனர்.