அமெரிக்கா செய்யும் பதற வைக்கும் சதி இது..! அழிக்கப்படும் பூமி – அனைவருமே அடிமைகள்..!!

உலகம் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டு அனைவரும் அடிமைகளாக மாறி வருகின்றனர், எதிர்காலத்தில் ஒரு குடையின் கீழ் முழு உலகமும் ஆட்சி செய்யப்படப் போகின்றது அதற்கான சதிகளும் மறைமுகமாக நடைபெற்று வருகின்றது.

அமெரிக்கா விஞ்ஞானம் என்ற பெயரில் உலகை அழிவுக்கு அழைத்து செல்கின்றது. உலகம் முழுவதனையும் ஆட்சி செய்யவே அமெரிக்காவின் NASA, UN, DARPA (அமெரிக்காவின் இராணுவ ஆய்வு மையம்) போன்றன செயற்படுகின்றன என மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கின்றது.

இதற்காக அமெரிக்கா எடுத்துள்ள அறிவியல் மூலமான பயங்கர ஆயுதமே காலநிலை என்பதாகும். ஆச்சரியமாக இருக்கின்றதா? நடந்து வரும் அழிவுகள் அனைத்தின் பின்னணியிலும் இருப்பது அமெரிக்காவே என ஆய்வாளர்கள் திட்டவட்டமாக கூறுகின்றனர்.

முழு உலகையும் பசுமை மிக்கதாக மாற்றியமைக்க முடியும், ஆனால் அது செய்யப்படுவதிலை. உலகின் ஒரு பகுதி வறட்சியால் அழிகின்றது, மறு பகுதி யுத்தங்களால் அழிகின்றது, இன்னுமொரு பகுதி என்ன நடந்தால் நமக்கென்ன என ஒன்றுமே தெரியாமல் இருக்கின்றது.

இப்போதைய அறிவியல் வளர்ச்சியின் படி பஞ்சம், வறட்சி தலைவிரித்தடும் போது செயற்கையாக மழையை பெய்விக்க முடியும்.

அதே போன்று அடுத்த பக்கம் பெய்ய வரும் மழையை தடுத்து நிறுத்தவும் முடியும். உலகம் தோன்றி மனித நாகரீகம் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்த போது காலநிலைகள் தாறுமாறாக மாற்ற மடையவில்லை என்பது அனைவருக்குமே தெரிந்த விடயம்.

ஆனால் நாளுக்கு நாள் காலநிலை மாறுவதன் பின்னணி அமெரிக்காவின் திட்டமிட்ட சதி என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

20ஆம் நூற்றாண்டின் பின்னர் சிகரம் தொட்ட வளர்ச்சியடைந்த அறிவியலின் படி,

நீர் நிலைகளின் மீது இரசாயண தாதுக்களை தெளித்து விட்டு நீர் ஆவியாகும் செயலை குறைத்து மழையை தடுக்க முடியும்.

முறையாக கட்டுப்படுத்தப்பட்ட வெப்பாற்றல் thermonuclear மூலமாக வான்வெளி வெப்பத்தை அதிகரிக்க முடியும்.

புகை மேகங்களை உருவாக்கி பூமியில் விழும் சூரிய ஒளிச் சக்தியை கூட்டவும் குறைக்கவும் முடியும்.

வெப்பத்தை உறுஞ்சுகின்ற இரசாயண கூறுகளை துருவப் பகுதிகளில் இடுவதன் மூலம் பனி உருகுவதை கூட்டவோ குறைக்கவோ முடியும்.

வான் பிரதிபலிப்பான்கள் மூலமாக புவியில் விழுகின்ற சூரிய ஒளியினை அதிகரித்து அதன் தாக்கத்தை அதிகரிக்க முடியும்.

இவை அனைத்துமே சாத்தியம் என விஞ்ஞானிகள் ஆய்வுகள் மூலம் நிறுவி, அமெரிக்கா செயற்பாட்டிலும் வைத்துள்ளனர் என்பதே நிதர்சனம். அப்படியாயின் ஏன் வறுமையை குறைக்க முடிவதில்லை சிந்தித்து பார்த்தீர்களா?

விமானங்கள் பறக்கும் போது அதன் தடங்கள் புகை வடிவில் தெரியும் அனைவரும் கவனித்திருப்போம் அதன் பெயரே Chemical sprayed. இதன் மூலமாகவே காலநிலை மாற்றம் செய்யப்படுகின்றது என்பதே ஆய்வாளர்களின் வாதம்.

NASA, UN, DARPA (அமேரிக்கவின் இராணுவ ஆய்வு மையம்) போன்ற பல அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தும் இரகசிய திட்டமே Chemtrails என்பதாகும்.

இதன் மூலமாகவே உலகின் காலநிலை கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது. காரணம் வானியலை தமக்கு ஏற்ற வகையின் பயன்படுத்துகின்ற நாடு மட்டுமே உலகை ஆட்டிப்படைக்க முடியும்.

செயற்கையாக காலநிலையை மாற்றி புவியை கட்டுப்படுத்தி உலகை ஆட்டு விக்கும் திட்டமே இது, அதனையே அமெரிக்கா செய்து வருகின்றது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துருவம் உருகுகிறது, எல் நினோ மூலம் பஞ்சம், புவி வெப்பமயமாதல், ஓசோனில் ஓட்டை, திடுக்கென்று சுனாமி, வரலாறு காணாத வகையில் வறட்சி, திடீரென நகரிப்போகும் பிளேட் மூலம் நிலநடுக்கம் என நூற்றுக்கணக்கான செய்திகள் வந்து சேருகின்றது.

ஆனாலும் இவை அனைத்துமே சரியான காலப்பகுதியில் நடைபெறுகின்றன. எனவே இவை அனைத்தும் இரகசியமாக நடத்தப்படுகின்றது என்பதே உண்மை எனப்படுகின்றது.

இந்த Chemtrails மூலம் அமெரிக்கா உலகை தனக்கு ஏற்றாப்போல் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கொண்டு வருகின்றது. எண்ணிப்பாருங்கள் அழிவுகளும் காலநிலை சீற்றமும் அழிப்பது என்னமோ அமரிக்காவை கொஞ்சமாகவும் ஏனைய இடங்களை பார தூரமாகவும் என்பது புரியும்.

 

-http://www.tamilwin.com