அன்வார் இப்ராகிமைச் சிறையிடுவதற்குத் தீட்டப்பட்ட சதித் திட்டத்திற்கு உடந்தையாக இருந்ததாய் வலைப்பதிவர் ராஜா பெட்ரா கமருடின் கூறியுள்ள குற்றச்ச்சாட்டை மீட்டுக்கொள்ளாவிட்டால் அவர்மீது அவதூறு வழக்கு தொடுக்கப் போவதாக தேசிய போலீஸ் படையின் முன்னாள் தலைவர் மூசா ஹசான் மிரட்டியுள்ளார்.
அது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்று மூசா கூறினார்.
வலைப்பதிவில் தம்மீது குற்றம் சுமத்தும் கட்டுரைகளை மீட்டுக்கொண்டு ராஜா பெட்ரா மன்னிப்பு கேட்க வேண்டும், தவறினால் வெளிநாட்டில் மறைந்து வாழும் அவர்மீது போலீஸில் புகார் செய்து அவதூறு வழக்கு தொடுக்கப் போவதாக மூசா தெரிவித்தார்.
ராஜா பெட்ரா அவரது மலேசியா டூடே வலைப்பதிவில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேலையும் மூசாவையும் பயன்படுத்திக்கொண்டு குதப்புணர்ச்சி வழக்கு II-இல் அன்வாரைச் சிறைக்குள் தள்ளினார் என்று கூறியிருந்தார்.