பொய்யான குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ளாவிட்டால் வழக்கு தொடுப்பேன்: ஆர்பிகே-க்கு மூசா எச்சரிக்கை

musaஅன்வார்  இப்ராகிமைச்  சிறையிடுவதற்குத்   தீட்டப்பட்ட    சதித்   திட்டத்திற்கு   உடந்தையாக   இருந்ததாய்   வலைப்பதிவர்   ராஜா   பெட்ரா   கமருடின்   கூறியுள்ள   குற்றச்ச்சாட்டை   மீட்டுக்கொள்ளாவிட்டால்     அவர்மீது   அவதூறு   வழக்கு   தொடுக்கப்   போவதாக    தேசிய   போலீஸ்   படையின்   முன்னாள்   தலைவர்    மூசா   ஹசான்   மிரட்டியுள்ளார்.

அது   ஒரு  பொய்யான  குற்றச்சாட்டு   என்று  மூசா  கூறினார்.

வலைப்பதிவில்    தம்மீது   குற்றம்   சுமத்தும்   கட்டுரைகளை   மீட்டுக்கொண்டு   ராஜா   பெட்ரா   மன்னிப்பு   கேட்க   வேண்டும்,  தவறினால்  வெளிநாட்டில்   மறைந்து   வாழும்   அவர்மீது   போலீஸில்   புகார்   செய்து   அவதூறு   வழக்கு  தொடுக்கப்    போவதாக   மூசா   தெரிவித்தார்.

ராஜா   பெட்ரா   அவரது   மலேசியா  டூடே  வலைப்பதிவில்,   முன்னாள்   பிரதமர்   டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  முன்னாள்    சட்டத்துறைத்   தலைவர்    அப்துல்  கனி  பட்டேலையும்    மூசாவையும்   பயன்படுத்திக்கொண்டு   குதப்புணர்ச்சி    வழக்கு   II-இல்      அன்வாரைச்  சிறைக்குள்   தள்ளினார்  என்று   கூறியிருந்தார்.