மகாதிர்: வேண்டாம், வேண்டாம்

no,no,noஎதிரணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று இப்போது அறிவிக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் இன்றிரவு மலேசியாகினி அலுவலகத்தில் சந்தித்த போது கூறினார். “நாம் இப்போது பிரதமர் பெயரைக் குறிப்பிட்டால் வேறு சிலர் அதனால் ஏமாற்றமடைவார்கள்; நமக்குள்ளே சச்சரவுகள் ஏற்படும் என்றார்.

எதிரணியின் பிரதமர் தேர்வு பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் செய்யப்பட வேண்டும் என்று பெர்சத்துவின் தலைவரான மகாதிர் கூறினார்.

பிரதமர் அனைத்து எதிர்க்கட்சிகளாலும், ஒரு கட்சியால் மட்டும் அல்ல, தேர்வு செய்யப்பட வேண்டும் என்றாரவர்.