அர்ஜெண்டினாவின் முன்னாள் அதிபர்மீது ஊழல் குற்றச்சாட்டு

argentinaஅர்ஜெண்டினா  முன்னாள்    அதிபர்    சிறிஸ்டினா   பெர்னாண்டஸ்  டெ  கிர்ச்சனர்,    அரசாங்கக்   குத்தகைகள்    வழங்கியதில்    ஊழல்    செய்ததாகக்  குற்றம்   சாட்டப்பட்டுள்ளார்.

அவர்மீதும்   அவரிடம்   நீண்ட   காலம்   திட்ட    அமைச்சராகப்     பணிபுரிந்த   ஜூலியோ   டெ    விடோமீதும்     வழக்கு    தொடர    கூட்டரசு    நீதிபதி   ஜூலியன்  எர்கோலினி    உத்தரவிட்டார்.

10பில்லியன்  பெசோக்களுக்குமேல்(யுஎஸ்$643 மில்லியன்)   பெறுமதியுள்ள    பெர்னாண்டஸ்   டெ  கிர்ச்சனரின்  சொத்துகளை   முடக்கவும்  எர்கோலினி   உத்தரவிட்டார்.