‘குண்டு தயாரிப்பு நிபுணன்’ என்று சந்தேகிக்கப்படும் நபர் பினாங்கில் கைது

arrestநேற்று   நிபோங்  தெபால்,  தாமான்  மினாமாவில்,  ஒரு   வீட்டில்   அதிரடிச்   சோதனை   நடத்திய   போலீசார்,    குண்டு   தயாரிப்பில்   கில்லாடி    என்று   நம்பப்படும்   ஓர்   ஆடவனை    கைது   செய்தனர். அவனுடன்   இருந்த   ஒரு  பெண்ணும்   கைது   செய்யப்பட்டார்.

அந்த   32  வயது   ஆடவன்மீது   ஏற்கனவே   ஆறு   குற்றப்பதிவுகள்   இருப்பதாகவும்    அவன்    தொலைவில்   இருந்தே  வெடிக்க   வைக்கக்கூடிய   குண்டுகளைத்    தயாரிப்பதில்     கெட்டிக்க்காரன்   என்றும்    பினாங்கு    போலீஸ்    தலைவர்    சுவா  கீ   லை   இன்று   ஜார்ஜ்டவுனில்    கூறினார்.

“அதிரடிச்   சோதனை   நடத்திய  போலீசார்   நான்கு   குழாய்க்  குண்டுகளையும்   கைப்பற்றினார்கள்.  அவை   அந்த   ஆடவனால்  தயாரிக்கப்பட்டவையாக    இருக்கலாம்”,  என்றாரவர்.