மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கிடந்தார்

polisநேற்று    ஜோகூர்    பாருவில்,   ஸ்ரீஆலம்    மாவட்ட     போலீஸ்    தலைமையகத்தில்,    துப்பாக்கிகளைச்   சுத்தப்படுத்திக்     கொண்டிருந்த     சார்ஜன் மேஜர்   ஒருவர்    தற்செயலாக   துப்பாக்கி   ஒன்று   வெடித்ததில்    பலியானார்.

நெகிரி   செம்பிலானைச்   சேர்ந்த   அபு  பக்கார், 51,    30 ஆண்டுகளாக   போலீசில் பணியாற்றி  வந்துள்ளார்.

நேற்று  நிலையத்தில்   அவர்  தனியாக   இருந்தபோது   அச்சம்பவம்   நிகழ்ந்தது   என  ஸ்ரீஆலம்   மாவட்ட   போலீஸ்  தலைவர்  சூப்ரிடெண்டன் ஜோக்கிரி   அப்துல்   அசிஸ்   கூறினார்.

“துப்பாக்கி   தவறுதலாக  வெடித்ததில்   குண்டு   அவர்   நெஞ்சில்   பாய்ந்தது. சம்பவம்   நிகழ்ந்த  இடத்திலேயே    அவர்   கொல்லப்பட்டார்”,  என்றவர்   ஓர்   அறிக்கையில்   கூறினார்.

காலை  ஏழு  மணிக்கு   வேலைக்கு   வந்த    சக   அதிகாரி   ஒருவர்   அபு  பக்கார்   தரையில்    இறந்து   கிடக்கக்   கண்டார்   என்றவர்    சொன்னார்.