நஜிப்: மசீச துணைப் பிரதமர் பதவியைக் கேட்கவே இல்லை

 

najibமுன்னாள் பிரதமர் மகாதிர் கூறிக்கொண்டுள்ளதைப் போல மசீச துணைப் பிரதமர் பதவியைக் கேட்கவே இல்லை என்று பிரதமர் நஜிப் கூறினார்.

தாம் நாட்டின் நம்பர் ஒன் தலைவராக இருந்து வரும் காலம் முழுவதிலும் அந்த பாரிசான் பங்காளிக் கட்சி ஒரு முறைகூட துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் பதவிகளைக் கேட்டதே இல்லை என்றார் நஜிப்.

சமீபத்தில் மசீச துணைப் பிரதமர் பதவியைக் கேட்டதாக கூறப்பட்டது. “நான் பிஎம் ஆன காலத்திலிருந்து, மசீச துணைப் பிரதமர் பதவியைக் கேட்டதே இல்லை. இது ஒரு பொய்.

“நான் மறுக்கிறேன். மசீசவும் மறுக்கும்படி கேட்டுகொள்கிறேன். மசீசவுக்கு மூன்று அமைச்சர் பதவிகள் இருக்கின்றன மற்றும் அவர்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றனர். அதிகமான பல்டிகள் அடிக்க வேண்டாம்”, என்று பிரதமர் நஜிப் இன்று லுக்குட்டில் நடைபெற்ற தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் 60 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் உரையாற்றிய போது கூறினார்.