ஊழல்வாதிகளுக்கு ஆயுள் தண்டனையும் பிரம்படியும் கொடுப்பீர்- பெர்காசா

perkasaவலச்சாரி   மலாய்  இயக்கமான   பெர்காசா,  ஊழல்   செய்வோருக்கு   ஆயுள்   தண்டனையையும்   பிரம்படிகளையும்   கட்டாயமாக்க   வேண்டும்   என்று   பரிந்துரைத்துள்ளது.

நாட்டில்  ஊழலைத்   தடுக்க,  போதைப்  பொருள்   கடத்தல்காரர்களுக்குக்  கொடுக்கப்படுவது    போன்ற   கடும்    தண்டனை   கொடுக்க    வேண்டும்   என  பெர்காசாவின்   நேர்மை   மற்றும்   ஊழல்தடுப்பு    பிரிவுத்   தலைவர்    ஜயிச்   அப்துல்  கரிம்    கூறினார்.

“ஆயுள்   தண்டனையும்   பிரம்படியும்   கொடுக்கப்பட    வேண்டும்   என்று   வலியுறுத்துகிறோம்.  அதுவே   குற்றத்துக்கு   ஏற்ற    தண்டனை”,  என்று   நேற்றிரவு   பெர்காசா   ஏற்பாடு    செய்திருந்த   ‘ஊழலுக்கு    எதிரான   மக்களின்   எழுச்சி’   கருத்தரங்கில்   அவர்   கூறினார்.