பாஸ்: ஊழல் இல்லை என்ற கூ நானின் கூற்று அனுவாரின் இடைநீக்கத்தால் பொய்யானது

pasஅம்னோ   தலைமைச்    செயலாளர்    தெங்கு   அட்னான்   துங்கு   மன்சூர்  தங்கள்    கட்சியில்    ஊழல்   இல்லை    என்று    கூறிக்கொண்டிருந்ததை   அனுவார்   மூசா   மீது   நடக்கும்    விசாரணை  பொய்யாக்கியுள்ளது    என   பாஸ்   துணைத்   தலைவர்  துவான்  இப்ராகிம்    துவான்   மான்    கூறினார்.

“அக்காணொளியை(தெங்கு   அட்னான்  பேசுவதை)க்   காண்போருக்குச்  சிரிப்புத்தான்   வரும்.     அதற்குக்   காரணம்    உண்டு.  அனுவார்மீது  எம்ஏசிசி    விசாரணை   நடத்துகிறதே”, என்றவர்  கூறினார்.

மாரா   தலைவர்   பதவியிலிருந்து   இடைநீக்கம்   செய்யப்பட்டிருக்கும்   அம்னோ   தகவல்   தலைவர்   அனுவார்   மூசாமீது   விசாரணை   மேற்கொண்டிருப்பதாக    எம்ஏசிசி    நேற்று    அறிவித்தது.

மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம்  (எம்ஏசிசி)  அரசியல்வாதிகள்மீது    கவனம்   செலுத்தி  வருவதாக     எச்சரித்திருந்ததை    அடுத்து    கூ  நான்  என்று   அழைக்கப்படும்   தெங்கு   அட்னான்,  கடந்த   வாரம்   அவ்வாறு   கூறியிருந்தார்.