முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் டிஏபியில் சேர்வாராம்

law ministerமுன்னாள்   சட்ட    அமைச்சர்   ஜைட்   இப்ராகிம்      தீவிர   அரசியலுக்குத்   திரும்பிவர   ஆயத்தமாகிக்  கொண்டிருப்பதுபோல்   தெரிகிறது. இதை   அவர்   சொல்லவில்லை    அவருக்கு   அணுக்கமான   வட்டாரங்கள்    தெரிவித்தன,

ஜைட்   அடுத்த   செவ்வாய்க்கிழமை    பெட்டாலிங்   ஜெயாவில்  நடைபெறும்   ஒரு   நிகழ்வில்    அதன்   தொடர்பில்   ஓர்    அறிவிப்பைச்   செய்வார்   என   எதிர்பார்க்கப்படுகிறது.  அந்நிகழ்வில்    முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்,    டிஏபி   தலைமைச்   செயலாளர்   லிம்  குவான்   எங்,  டிஏபி   முத்த   தலைவர்    லிம்  கிட்  சியாங்    ஆகியோரும்   கலந்து  கொள்கிறார்கள்.

ஆனால்,  ஜைட்   அதை    உறுதிப்படுத்தவில்லை.

மலேசியாகினி   அவரைத்   தொடர்பு  கொண்டபோது,  “செவ்வாய்க்கிழமை   உங்கள்  கேள்விக்குப்   பதிலளிப்பேன்”,  என்று   மட்டும்   கூறினார்.