தூக்கிலிடப்படவிருக்கும் மகனைக் காப்பாற்றக் கோரி கண்ணீர் விடும் தாய்

 

savethesonமலேசியரான கே. தட்சணமூர்த்தி சிங்கப்பூருக்கு போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக அவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் தூக்குத் தண்டணை விதித்து தீர்ப்பள்ளித்துள்ளது. தமது ஒரே மகனை தூக்கிலிருந்து காப்பாற்றும்படி தாயார் எ. லெட்சுமி மலேசிய அரசாங்கத்தை வேண்டிக்கொண்டார்.

“நான் எனது மகனுக்காக மட்டும் கேட்கவில்லை. அங்கே மரண தண்டணையை எதிர்நோக்கி இதர மலேசியர்களும் இருக்கிறார்கள்.

“நமது நாட்டின் பிரதமர் உதவ முடியும், உதவ வேன்டும், அவர்கள் இந்நாட்டின் குழந்தைகள்.

“நான் ஒரு மலேசியன். எனது நாடு மலேசியா எனக்கு உதவும் என்று நம்புகிறேன் அல்லது ஏதாவது செய்யும். இது மனித உயிர் பற்றியது”, என்று கன்ணீர் வழிய லெட்சுமி கூறினார்.