15 பேர் உயிருடன் எரித்துக் கொலை: தப்பித்து செல்ல முயன்றவர்களுக்கு நடந்த கொடூரம்

isis_leader_001ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் 15 பேரை உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் களமிறங்கியுள்ளது.

எனினும் அவர்களது அராஜங்கள் ஒழிந்தபாடில்லை, இந்நிலையில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தில் இருந்து தப்பித்து செல்ல முயன்ற 15 பேரை உயிருடன் தீவைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கின் அல் ஷஜரா கிராமத்தில் வசிக்கும் மக்களையே இவ்வாறு கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

குழந்தைகள் உள்பட 15 பேரை தார் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றுள்ளனர், இனிமேல் யாராவது தப்பித்து ஒட முயன்றால் அவர்களுக்கும் இதே கதி தான் என எச்சரித்துள்ளனர்.

-http://news.lankasri.com