5000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவில் கண்டுபிடிப்பு!

தென் அமெரிக்க நாடான பெருவில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவில் ஒன்று ஆராய்ச்சியாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெருவில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். ஆய்வின் முடிவில், செவ்வக வடிவில் நுழைவு வாயிலை கொண்டுள்ள 5000 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட கோயிலை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் கிறிஸ்து பிறப்பிற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் மிகவும் நாகரிகமாக வாழ்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, கோவிலில் 8 மீட்டர் அளவிலான பிரமிடு இருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com