எம்ஏசிசி விசாரணையில் ஜோகூர் அரண்மனை குறுக்கிடாது

johorஜோகூர்   மாநிலத்தில்   மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம் (எம்ஏசிசி)   மேற்கொண்டுள்ள   எந்தவொரு   விசாரணையிலும்   அரண்மனை    தலையீடு   இருக்காது    என்கிறார்    ஜோகூர்   ஆட்சியாளர்   சுல்தான்   இப்ராகிம்   இஸ்கண்டார்.

“இப்படிப்பட்ட    விவகாரங்களில்    அரண்மனை   குறுக்கிடுவதுமில்லை,  யாரையும்   பாதுகாப்பதுமில்லை”,  என  சுல்தான்   இப்ராகிம்    கூறியதாக   த   ஸ்டார்    அறிவித்துள்ளது.

ஜோகூரில்   எம்ஏசிசி    செய்துவரும்   விசாரணைகள்   குறித்துக்    கருத்துரைத்தபோது    சுல்தான்    இவ்வாறு   கூறினார்.

“எம்ஏசிசி   அதன்   விசாரணைகளைத்    தொடரட்டும்,  சட்டம்    அதன்   கடமையைச்  செய்யட்டும்”,  என்றாரவர்.

எம்ஏசிசி,    ஜோகூரில்   பூமிபுத்ரா  நிலங்கள்   பட்டா  மாற்றப்பட்ட   விவகாரம்   குறித்து    விசாரணை    செய்து   வருகிறது.